வியாழன், 19 மே, 2011

Good Morning Sir,
Please click this link 

Application Form
Information Brochure



With regard 

C.KANAGARAJ
9894717167

Following is the population of our voters(as given to party leaders to show our strength)
Gobichettipalayam---48000,
Bhavanisager-----45000,
Bhavani----37000,
Modakurichi----40000,
Thiruchengodu---25000,
Paramathi velu----27000,
Edapadi---15000,
Karur---20000,
Aravakurichi---32000,
Kinathukadavu---35000,
Pollachi--47000,
Thondamuthur--25000,
Krishnarayapuram--15000,
Ottanchatram---15000,
Athur--20000,
Coimbatore south---20000,
Perundurai----15000,
Goundampalayam--17000,
Anthiyur--25000,
Komarapalayam---15000,
Senthamangalam---10000,
Vedasandur----22000,
Natham---10000,
Singanallure---15000,
Sulur---17000,
Palladam---10000,
Pongalur---12000,
Tirupur----10000.

In addition to this our voters are also spread across 22 other constituencies. (The list includes Pooluva
vettuvagounder&Punnam vettuva gounder).

Regards,

கொங்கு வேட்டுவக்கவுண்டர் வீர வரலாறு

கொங்கு நாட்டுச் சமுதாய வரலாற்றில் வேட்டுவர் முக்கியமானதோர் இடத்தை வகிக்கின்றனர். இவர்கள் வேட்டையாடுதலை தமது முதன்மைத் தொழிலாகக்கொண்டிருந்தனர். கொங்கு நாட்டின் பூர்வ குடிகளான வேட்டுவர்.வேடன்,வெற்பன்,சிலம்பன்,எயினன், ஊரான், வேட்டுவதியரையன்,ஊராளி,நாடாழ்வான், முதலான பெயர்களாலும் அழைக்கப்பட்டனர். வரலாற்று காலத்திற்கு முற்பட்ட காலத்திலிருந்தே இவர்கள் கொங்கு நாட்டில் வாழ்ந்து வந்தனர் என்பதனைச் சங்க இலக்கியங்களால் அறிகிறோம்.

ஆதாரங்கள்

கல்வெட்டுக்கள்,செப்பேடுகள்,புராணங்கள்,இலக்கியங்கள் ஆகியவற்றின் துணை கொண்டு வேட்டுவரின் வரலாறு பற்றி அறிந்து கொள்கிறோம். திருவெஞ்சமாக் கூடல். கரூவூர்,வெங்கம்பூர்,திருச்செங்கோடு,ஈரோடு,ஏழூர்,மூக்குத்திபாளையம்,பருத்திபள்ளி,வாழவந்தி அருகில் உள்ள குட்லாம்பாறை,அவினாசி,திருமுருகன் பூண்டி,இரும்பறை,பழமங்கலம்,அந்தியூர்,சங்ககிரி முதலான ஊர்களில் உள்ள கல்வெட்டுக்களும் தென்னிலை, ஊசிப்பாளையம்,திருச்செங்கோட்டுச் செப்பேடுகளும்,சோழன் பூர்வபட்டயமும், இலக்கியங்களும் வேட்டுவர் பற்றிய பல செய்திகளை எடுத்தியம்புகின்றன.கொங்கு நாட்டு நடுகற்களும்,புலிக்குத்திக் கற்களும் வேட்டுவரின் வீரத்தைப் பறை சாற்றுகின்றன.

பூர்வீகம்

இவர்களது பூர்வீகம் பற்றி ஒருமித்த கருத்து உருவாகவில்லை. கனகசபைப்பிள்ளை அவர்கள் இவர்களை நாகர் இனத்தவர் என்பார். புராணங்களும்,பழங்கதைகளும் இவர்களை குருகுலத்தவர் எனச் சுட்டும்.சைவ நாயன்மார்களுள் ஒருவரான கண்ணப்பரின் கால்வழியினரே வேட்டுவர் எனக்கருதுவோரும் உண்டு.இருப்பினும் இவர்கள் கொங்கு நாட்டின் பூர்வகுடிகள் (ஆதிகுடிகள்) என்பதுறுதி. வேட்டுவர் பிரமனால் படைக்கப்பட்ட ஆதிவமிசத்தார் என்று வேளாளர் புராணம் கூறும்.வேறு சில பட்டயங்கள் வேட்டுவர் முத்தரையரின்(முத்துராஜா) கால்வழியினர் எனச்செப்புகின்றன.முத்தரையரும், வேட்டுவரும் கண்ணப்பநாயனாரைத் தமது குலதெய்வமாக வணங்கி வருவதும் சிந்திக்கத்தக்கது.எட்கர் தர்ஸ்டன் அவர்களும் முத்தரையர்,வேட்டுவர்,வலையர் ஆகியோர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்று குறிப்பிட்டிருப்பதும் இங்கே நினைவு கூர்தற்குரியது.
இவர்களுள் 1.வேட்டுவன், 2.வேடன், 3.காவிலவன், 4.மாவிலவன், 5.பூவிலவன் எனும் ஐந்து பெரும் பிரிவுகள் இருந்தன.பிற்காலத்தில் இவர்கள் கவுண்டர் எனும் பட்டத்தைப் புனைந்து கொண்டனர்.
வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்ட காலத்திய பாறை ஓவியங்களும் குகை ஓவியங்களும் கொங்கு நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவற்றில் சித்திரிக்கப்பட்டிருக்கும் வேட்டைக்காட்சிகள், வேட்டுவரின் வாழ்கை முறையைச் சித்திரிப்பதாகவே உள்ளன.கொங்கு நாட்டில் காணப்படும் ஈமச்சின்னங்களும், புதைகுழிகளும், இறந்தோர் நினைவுகற்களும், பெருங்காலச் சின்னங்களும் வேட்டைத் தொழிலை மேற்கொண்ட வேட்டுவருடையதே என்று மேல் நாட்டறிஞர் எஃப்.ஏ.நிக்கல்சன் கருதுவார்.இதனால் வேட்டுவரின் தொன்மை புலனாகும்.

சங்க காலம்

சங்க காலத்தில் இவர்கள் வேட்டையாடுவதையும் ஆடுமாடு மேய்பதையும் தமது தொழிலாகக் கொண்டிருந்தனர்.அதே சமயத்தில் சிலர் போர்ப்படைகளில் வீரர்களாகப் பணிபுரிந்து,தமது வில்லாற்றலை வெளிக்காட்டினர்.அதே காலகட்டத்தில் வேட்டுவ குழுத்தலைவர் சிலர் குறுநில மன்னர்களாகவும் திகழ்ந்தனர். எடுத்துக்காட்டாகக் கோடை மலைத் தலைவனான கடிய நெடுவேட்டுவன்,தோட்டி மலைதிதலைவனான கண்டீரக்கோப் பெருநற்கிள்ளி,கொல்லி மலைத்தலைவனான வல்வில் ஓரி,கொடுமுடி முதலியோரைச் சுட்டலாம். சிலர் வழிப்பறி செய்யும் ஆறலைக் கள்வர்களாகவும் விளங்கினர்.

முன்னேற்றம்

ஓரிடத்தில் நிலையாகத் தங்காமல் அலைந்து திரிந்து வேட்டைத் தொழிலை மேற்கொண்ட வேட்டுவருள் பலர்,சிலகாலம் சென்ற பின்னர் ஓரிடத்தில் நிலைத்து வாழ்ந்தனர்.உணவு தேடும் நிலையை விட்டு உணவு உற்பத்தி செய்யும் நிலைக்கு முன்னேறினர்.சமவெளிகளில் வேளாண்மைத் தொழிலில் ஈடுபட்டனர்.இதுவே வேட்டுவர் வாழ்வில் நிகழ்ந்த மாபெரும் புரட்சி எனலாம்.இவர்களை வெளாளர்(வேளாளர்) என சோழர்காலக் கல்வெட்டுகள் கூறுகின்றனர்.வரலாற்றுத் தொடக்க காலத்தில் வேட்டைத் தொழிலில் ஈடுபட்ட இவர்கள், இடைக்காலத்தில் வேளாண்மையில் நாட்டம் கொள்ளும் அளவிற்கு உயர்ந்தனர்.

சோழர் காலம்

கி.பி.ஒன்பதாம் நூற்றாண்டில் முதல் ஆதித்த சோழன் இராசாவேடர்களை வென்று, கொங்கு நாட்டைக் கைப்பற்றினான். இதனால் வெள்ளாளர் என்போர் வேட்டுவரின்றும் தோன்றியவர்களே என்பது புலனாகும். சிலர் மட்டும் வேட்டுவர்களாகவே இருந்தனர். இதன் விளைவாகக் கொங்கு நாட்டின் பல பகுதிகளில் குறுநில மன்னர்களாகத் திகழ்ந்த வேட்டுவத் தலைவர்கள், சோழரது படைத்தலைவர்களாக மாற்றப்பட்டனர். சோழர்கள் கொங்கு நாட்டில் வேளாண்மையைப்பெருக்க பல அரிய முயற்சிகளை மேற்கொண்டனர். சோழரின் ஆதிக்கம் கொங்குநாட்டு வரலாற்றில் ஒரு திருப்பு முனை எனலாம். கி.பி.பத்தாம் நூற்றாண்டளவில் தொண்டை நாட்டிலிருந்தும், சோழநாட்டிலிருந்தும் கொங்கில் குடியேற்றப்பட்ட வேளாளர்கள்(கொங்கு வேளாளர்) நீர்ப் பாசனத்துடன் கூடிய விவசாயத்தை விரிவுபடுத்தனர். கல்வெட்டுகளில் வேளாளர்கள் கி.பி.பத்தாம் நூற்றாண்டிற்குப் பின்னரே குறிப்பிட பெறுகின்றனர் என்பது இங்கே நினைவு கூறத்தக்கது.

சமுதாய வாழ்வில் வேட்டுவர்-வெள்ளாளர் நிலை

கி.பி.பத்து-பதினாறாம் நூற்றாண்டுகளில், வேளாளர்கள் மிகச் சிறந்த முறையில் வேளாண்மையை முன்னேற்றி, உணவுப் பொருள்களை உற்பத்தி செய்து,பொருளாதாரத் துறையில் பெரிதும் முன்னேறினர். கொங்கு நாட்டின் பூர்வ குடிகளான வேட்டுவரின் பொருளாதார நிலை சிறிது தாழ்ந்தது. சில இடங்களில் வேட்டுவர்க்கும், வேளாளர்க்கும் போட்டியும் பூசல்களும் ஏற்பட்டன. கி.பி.12-13 ஆம் நூற்றாண்டுகளில் இருவர்க்குமிடையே சமரசமும், சமாதானமும் ஏற்பட்டன. வேட்டுவரின் நில உரிமைகளும்,கோயில் வழிபாட்டு, முப்பாட்டு உரிமைகளும் வேளாளர் கைக்கு மாறின.வேட்டுவர்-வேளாளரிடையே நிகழ்ந்த காணியாட்சி உரிமை மாற்றம், வேளாளரின் பொருளாதார உயர்ச்சி ஆகியவை பற்றிய செய்திகள் சோழன் பூர்வபட்டயம் எனும் சாசனத்தில் விரிவாகக் கூறப்பட்டுள்ளன. வேட்டுவர்களைப் போன்று வேளாளர்களும் தமக்குள் கூட்டப் பெயர்களைப்(குலம்) பூண்டனர்.

வேட்டவூர்,பூலுவ ஊர்,பூலுவ நாடு

வேளாளரைப் போன்று வேட்டுவரும் தமக்கெனத்தனியான சமூக அவைகளைக் கொண்டிருந்தனர்.வேளாளர் ஊர் அளவில் வெள்ளாளனூர் (வேளாளர் ஊர் அவை) அமைப்பைப் பெற்றிருந்தது போன்று வேட்டுவரும் வேட்டவூர் (வேட்டுவர் ஊர் அவை) அல்லது பூலுவ ஊர் எனும் அமைப்புக்களைக் கொண்டிருந்தனர். அடுத்து பூலுவ ஊரார் இணைந்து பூலுவ நாடு எனும் நாட்டர் அவையையும் கொண்டிருந்தனர். எடுத்துக்காட்டாக அன்னூரிலிருந்து பூலுவ ஊர், சேவூரிலிருந்து பூலுவ ஊர், திங்களூரில் இருந்த வேட்டவூர், விசயமங்கலத்தில் செயல்பட்டு வந்த வேட்டவூரைச் சுட்டலாம்.
வேட்டுவ வீரர் பலர் சோழரது படையில் பணிபுரிந்து, சோழரது மேலாதிக்கம் பரவ பாடுபட்டனர். எடுத்துக்காட்டாக அழகன் காளி எனும் வேட்டுவத் தலைவன் முதல் இரசேந்திர சோழனின் வெற்றிக்காகப் போராடி வீர மரணம் அடைந்ததனைக் குறிப்பிடலாம். இதனைக் கூறும் தூக்காச்சிக் (ஈரோடு வட்டம்) கல்வெட்டைக் கீழே காண்போம்.
“ஸ்வஸ்திஸ்ரீ பூர்வதேசமும் கங்கையும்......
            சோழர்க்குச் செல்லா நின்ற யாண்டு
            ........ஊராளி வேட்டுவன் அழகன்
            காளி அவன் இதில் பட்டான்.”
சோழருக்குப் பின்னர் சோழரை அடுத்துப் பிற்காலப் பாண்டியரும் ஒய்சாளரும் கொங்கு நாட்டில் மேலாண்மை செலுத்தினர். பாண்டியர் வில்லாற்றல் மிக்க வேட்டுவ வீரர்களைப் பெருமளவில், தமது படையில் சேர்த்துக்கொண்டனர். கொங்கில் மேலாண்மையைச் செலுத்திய சுந்தர பாண்டியனின் ஆட்சிக்காலத்தில்(1252 – 1271) அந்தியூரன் எனும் வேட்டுவத் தலைவன், திருச்செங்கோட்டுப் போரில் பாண்டியரது பக்கம் நின்று போரிட்டு மாண்டான் என்பதனைச் சேலம் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள நடுகல் கல்வெட்டால் அறிகிறோம். இதோ அக்கல்வெட்டு.
“ஸ்வஸ்தி ஸ்ரீ சுந்தரபாண்டியா
          தேவற்கு யாண்டு 6 – வது
          வடகரை நாட்டு உரகடங்கச்சதி
          கண்ணையன் வேட்டுவரில்
          அந்தியூரன்”

பட்டக்காரர்கள்

விசயநகர வேந்தரது ஆதிக்கம் கொங்கு நாட்டில் பரவிய போது, வேட்டுவரும் வேளாளரும் பாளையக்காரர்களாக நியமிக்கப்பட்டனர். இவர்கள் பட்டக்காரர் எனவும் அழைக்கப்பட்டனர். வேட்டு பட்டக்காரர் எனவும் அழைக்கப்பட்டனர், தென்னிலை, காக்காவாடிப் பட்டக்காரர்கள் குறிப்பிடத்தக்கவர் ஆவர். இதே காலக்கட்டத்தில் வேட்டுவத் தலைவர் சிலர் அரண்மையாளர்களாகவும் திகழ்ந்தனர். இவர்களுள் கொடையூர் சீத்தப்பட்டி, நிமந்தப்பட்டி, நவமரத்துபட்டி, நல்லகுமரன் பட்டி, இழுப்பக்கிணத்துப்பட்டி, அரண்மனையாளர்கள் புகழுடன் விளங்கினர். வேட்டுவத் தலைவருள் பலர் காணியாளர்களாகவும் ஊராளிகளாகவும் திகழ்ந்தனர். இதனைப் பல கல்வெட்டுக்கள் உறுதி செய்கின்றன.
மேற்கூறியவற்றான் வேட்டைத் தொழிலை முதன்மையாகக் கொண்டிருந்த வேட்டுவர், நாளடைவில் படைவீரர்களாகவும்படைத் தலைவர்களாகவும், காணியாளர்களாகவும், ஊராளிககளாகவும், திகழ்ந்தமை அறியப்படுகின்றன. சிலர் காடுகளை அழித்து கழனிகளாக மாற்றி வேளாண்மைத் தொழிலிலும் ஈடுபட்டனர் இவர்கள் பழங்கொங்கு நாடு முழுவதும் வாழ்ந்து வந்த போதிலும் வடகொங்கில் அதிக எண்ணிக்கையில் இருந்தனர். காவிரி, நொய்யல், அமராவதிப்படுகைகளில் அவர்களது குடியிருப்புகள் மிகுதியாகவே இருந்தன.

வேட்டுவரின் குலப்பிரிவுகள்

வேர்வகையை எண்ணினாலும் வேட்டுவர் வகையை எண்ண முடியாது – என்பது பழமொழி. ஆம் வேட்டுவரிடையே எண்ணிறந்த குலப்பிரிவுகள் இருந்தன என்பதைக் கல்வெட்டுக்களாலும் செப்பேடுகளாலும் அறிகிறோம். இது காறும் ஏறத்தாழ 203 வேட்டுவரது குலப்பெயர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

வேட்டுவரின் வீரப்பண்பு

கொங்கு நாட்டில் காணப் பெறுகின்ற நடுகற்கள், புலிக்குத்திக் கற்கள் ஆகியன வேட்டுவரின் வீரத்தையும், அஞ்சாமையும் பறைசாற்றுகின்றன. எடுத்துக்காட்டாக கரையகுல சொக்கனின் பெருவீரத்தைப் போற்றிப் புகழும் பழமங்கலம்(பெரியார் மாட்டம்) நடுகல் கல்வெட்டைச் சுட்டலாம். அக்கல்வெட்டைக் கீழே காண்போம்.
“வாய்த்த புகழ் மங்கலத்து வந்தெதிர்த்த மாற்றலரைச்
              சாய்த்த மருள் வென்ற சயம்பெருகச் சீர்த்த புகழ்
              நிக்குவனம் கற்பொறிக்கப்பட்டான் கரைய குலச்
              சொக்கனேந்தலேவுலகிற் காண்.
              இக்கற்பொறி ரகூஷிப்பான் பாதம்என் தலை மேலே”
“வெட்ட வெட்டத் தலைக்குது வேட்டுவர் படை எனும்” முதுமொழியும் வேட்டுவரின் வீரத்திற்கோர் இலக்கியமாகத் திகழ்கிறது.
புலியைக் குத்திக் கொல்லுவதில் இவர்கள் வல்லவர்களாகத் திகழ்ந்தனர். இதன் நினைவாகக் கொங்கு யநாட்டில் பல புலிக்குத்திக்கற்கள் காணப்படுகின்றன. புலியைக் குத்தியதன் நினைவாகப் பலர் புலிக்குத்தி எனும் பட்டத்தையும் தமதுபெயருடன் சூட்டிக்கொண்டனர். இதனைப் பாண்டிய வேட்டுவரில் வீரன் புலிகுத்திதேவன் எனக் குறிப்பிடும் வெள்ளோட்டுக் கல்வெட்டாலறியலாம்.

வேட்டுவரின் பொதுப்பணி

கால்வாய் வெட்டுதல், அணைகட்டுதல், குளம் வெட்டுதல், நீர்பாசனத்தைப் பெருக்குதல், ஊரில் புகுந்து மக்களுக்கும்,மாக்களுக்கும், தீங்கு விளைவிக்கும் கொடிய மிருகங்களைக் கொல்லுதல் – முதலான பொதுப்பணிகளிலும் வேட்டுவர் ஈடுபட்டிருந்தனர் என்பதைக் கல்வெட்டுச் சான்றுகளால் அறியலாம். வேளாண்மையின் உயிர்நாடியாக, அச்சாணியாக விளங்கும் நீர்பாசனத்தைப் பெருக்குவதில் வேட்டுவத் தலைவர்கள் பெரிதும் ஈடுபாடு கொண்டிருந்தனர்.
சேலம் மாவட்டம் வடகரை ஆற்றூரில் வாழ்ந்து வந்த அல்லாளன் இம்முடித்திருமலை இளையான், காவிரியிலிருந்து ராஜ வாய்க்கால் எனும் கால்வாயை வெட்டினான், ஜேடர் பாளையத்திலிருந்து வேலூர் வழியாகப் பாலப்பட்டி வரை சென்று ஒடுவந்தூரில் முடிவடையும் இது காவிரியில் வெட்டப்பட்ட முதல் கால்வாய் என்பது குறிப்பிடத்தக்கது.
பூச்சந்தை வேட்டுவன் பெரிய பெருமாள் முத்தாண்டன் என்பான், வடபரிசார நாட்டு நவிரையான கப்பலன் கிடாரன் எனும் ஊரில் தாமரைக்குளம் ஒன்று வெட்டினான். பெரிய விளங்கி ஊராளியான சுண்டை வேட்டுவன் எழுகரை நாட்டில் அக்கசாலைக் கங்கை எனும் பெயரில் குளம் ஒன்று வெட்டினான். இதனைக் கீழ்காணும் கல்வெட்டு விளக்குகிறது.
“ஸ்வஸ்தி ஸ்ரீ எழுகரை நாட்டு அக்கைசாலை
           கங்கை என்று பேரிட்டு இக்
           குளம் அட்டினேன் பெரிய விலங்கி
           ஊராளியாகிய சுண்டை வேட்டுவன்
           சிலம்பன் சிறியன் ஆன எழுக
           ரை நாட்டு அக்கை சாலைகள் மாத்த
           ஆராத பிள்ளையேன் பேர் மலை”
(சேலம் மாவட்டம், மூக்குத்தி பாளையம் அருகில் மோழப்பறையில் உள்ளது)
இதனைப் போன்று வேட்டுவர் நீர்பாசனத்தைப் பெருக்க பல பணிகளைச் செய்துள்ளனர் என்பது கல் வெட்டுகளால் புலனாகிறது.

இறைப்பணி

பொதுப்பணியில் பேரார்வம் காட்டிய வேட்டுவர் திருக்கோயில்களைக் கட்டுவதிலும், அதில் புதிய கட்டுமானப்பணிகளை மேற்கொள்வதிலும், இறைவனது திருவுருவங்களை எழுந்தருளச் செய்வதிலும், கோயில் வழிபாடு சிறப்புற நடைபெற நிலக்கொடைகள் விடுவதிலும் ஆர்வம் காட்டினர். இதனைக் கல்வெட்டு ஆதாரங்களால் அறியலாம். எடுத்துக்கட்டாகப் பெரியார் மாவட்டம் அறச்சலூர்க் கல்வெட்டை சுட்டாலாம். இதோ அக்கல்வெட்டு.
“ஸ்வஸ்திஸ்ரீ ஒய்சள புஜபல வீரவல்லாள
          தேவர்பிருத்வி ராஜ்யம் பண்ணி ஆருளா
          நின்ற யுவ சம்வத்சரத்துத் தை
          மாதத் தொருநாள் மேல்கரைப்
          பூந்துறை நாட்டு அறச்சலூரில்
          கரைய வேட்டுவரில் செய்யான்
          பல்லவரையனேன் இவ்வூர் புற்றிடங்
          கொண்டநாயனார் கோயிலில்
          திருக்கட்டளையில் திருநிலைக் காலும்
          படியும் செய்வித்தேன்.”
          
         (புலவர் செ.இராசு அவர்கள் படித்தது)
வெங்கட்சி வேட்டுவன் ஒருவன் சங்ககிரி வட்டத்திலுள்ள மருதூரில் காளியம்மன் கோயிலைக் கட்டினான். அதியமான் நடுவில் நங்கன் என்பான் பருத்திபள்ளிச் சிவன் கோயிலைப் புதுப்பித்தான். கல்லை வேட்டுவனான குறுஞ் சொக்கன் உலகடம் உலகேஸ்வரர் கோயிலில் அர்த்த மண்டபத்தையும், பின்னப்படுத்தப்பட்ட இத் திருக்கோயிலைப் புதுப்பித்துக் குடமுழுக்கும் செய்வித்தான்.(கி.பி.1643)

இந்த உலகம் விசித்திரமானது. இதில் உள்ள மக்கள் ஆச்சர்யமான இயல்பு உடையவர்கள். தாங்கள் வளர வேண்டும் என்ற தீவிரமான எண்ணம் உடையவர்களால் தான் உலகம் முன்னேறுகிறது. புதிய புதிய மாற்றங்களை உலகம் பெறுகிறது. ஆனால் இந்த நேர்மறையான எண்ணத்தோடு உலகம் நிறைவு பெற்றிருந்தால் நன்றாக இருந்திருக்கும். தான் வாழ வேண்டும். வளர வேண்டும் என்பதோடு நில்லாமல் பிறர் அழிய வேண்டும் என்கிற குரூரமான எண்ணமும் எதிர்மறையான மனோபாவமும் இங்கிருப்பதுதான் உலகத்தின் சகல சிக்கல்களுக்கும் காரணம். பல குடும்பங்கள் முன்னேறாமல் போனதற்கு இந்தக் குணம்தான் காரணம். "நான் நன்றாக இருக்க வேண்டும்" என்று மணிக்கணக்காகக் கடவுளிடம் வரம் கேட்கும் சிலர் "நீ விளங்கமாட்டே.. நல்ல இருக்க மாட்டே.." என்று நெருங்கிய உறவுகளைக்கூடக் கோபத்தில் சாபம் வழங்கி ஏசுகிறார்கள். எல்லோரும் வளர்ந்தால் உலகம் வளரும். ஒருவர் வளர்ந்து மற்றவர் கீழே போனால் அது முழு வளர்ச்சியாகுமா? அடுத்து என்ன நடக்கும்? கீழே போனவர் சும்மா இருப்பாரா? அவர் நாலு கோவிலுக்குப் போய் வேண்டுவார்.. என்ன வேண்டுவார்? "என் எதிரி இன்று நல்லா இருக்கிறானே! அவன் வாழலாமா! அவன் வளரலாமா! கடவுளே உனக்கு கண் இல்லையா? அந்தப் பயல் தெருவில் நிற்க வேண்டமா! அவன் கஷ்டப்படுகிற காட்சியை என் கண்ணால் நான் பார்க்க வேண்டாமா?" என்று வேண்டுவார்.

அவரது சாபம் இவரை வீழ்த்தும். இவரது சாபம் அவரை வீழ்த்தும். மொத்தத்தில் இருவரும் ஆரம்பித்த இடத்திலையே இருப்பார்கள். ஒருவரை ஒருவர் வளர விடாமல் செய்வதால் இருவருமே வளர முடியாது. ஒருவரை ஒருவர் ஓடவிடாமல் தடுப்பதால் இருவருமே ஓட முடியாது. இருவருமே புறப்பட்ட இடத்தில் இருக்க வேண்டியதுதான்.! இந்த உண்மையை ஏன் பலர் புரிந்து கொள்ளவில்லை.!

"நான் நன்றாக இருக்க வேண்டும்" என்று மட்டுமே வேண்டுவது சுயநலம் என்றாலும் அதில் பெரிய குற்றம் இல்லை. ஆனால் உத்தம மனம் உடையவர்கள் "ஸர்வ லோகோ சுகினோ பவந்து" என்றுதான் வேண்டுவார்கள். "எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறு ஒன்று அறியேன் பராபரமே" என்று வேண்டுகிற தாயுமானவர் தமிழே நம் தாரக மந்திரமாக இருக்க வேண்டும்.

பலவிதமான நம்பிக்கைகள், பழக்கவழக்கங்கள், பண்பாட்டு வாழ்வியல் முறைகள் உடையதே உலகம். உலகில் வாழ்பவர் ஒருவரை ஒருவர் வெறுக்காமல், பகைக்காமல், பிறரையும் பிறரது நம்பிக்கைகளையும், உணர்வுகளையும் பழிக்காமல் புரிந்து கொள்ள கொஞ்சம் அக்கறையும் முயற்சியும் வேண்டும்.

மானிட பண்பாளர்களுக்குரிய தகுதியை நம்மில் வளர்த்துக் கொள்வோம், எமது கண்ணில் பிறருக்காக அழுவோம். பிரச்சனைகளாகவல்ல, தீர்வின் அங்கமாக நாம் இருப்போம். பிறக்கவிருக்கும் புதிய ஆண்டோடு சேர்த்து நம்மையும் புதிதாக பிறப்பித்துக்கொள்வோம். மாற்றம் ஒன்றே மானிட தத்துவம். மாற்றம் என்ற சொல்லைத் தவிர உலகில் அனைத்தும் மாறிவிட வேண்டும். எமது பண்புநலன் உட்பட. பண்பாளர்களுக்குரிய குணநலனைக் கொண்டு நம்மை பரிசோதித்து சீர்படுத்திக் கொள்வோம்.


01.பண்பாளர்கள் தெளிவாகவும், தர்க்கரீதியாகவும் சிந்திக்கிறார்கள். தைரியத்துடனும் கண்ணியத்துடனும் வாழ்கிறார்கள். விருப்பத்துடனும் பெருந்தன்மையுடனும் கொடுக்கிறார்கள். அன்புடனும் பெரிய மனதுடனும் மன்னிக்கிறார்கள்.

02.தனிச்சிறப்புரிமைகளைவிட கடமைகளுக்கு அதிக முக்கியத்துவம் உண்டு; பாதுகாப்பைவிட சுதந்திரம் மதிப்பு மிக்கது என்பதை அவர்கள் புரிந்து வைத்திருக்கிறார்கள்.

03.கல்விக்கு கரையேதும் இல்லை: வாழ்க்கை என்பது முடிவே இல்லாத வளர்ச்சி இயக்கம் என்பதை அறிந்திருக்கிறார்கள்.

04.அழகின் சாரம் எளிமைதான் என்பதையும், நேர்மை தான் பண்புநலனின் அஸ்திவாரம் என்பதையும் புரிந்து வைத்திருக்கறார்கள்.

05. அளவற்ற செல்வத்தைவிட மகத்தான கருத்துக்கள்தான் நிரந்தரமானவை: அலங்காரச் சொற்களை விட நிதர்சனமாக எடுத்துக்காட்டுகள் கற்றுத்தருவது அதிகம் என்பதை புரிந்து கொள்கிறார்கள்.

06. கற்றுக் கொள்ளுதல் என்னும் மெழுகுவர்த்தியில் ஆர்வம் என்பது திரியைப் போன்றது, வியப்பு என்பது சாகசங்கள் மற்றும் சாதனைகளை ஒளியேற்றுகிற நெருப்புப்பொறி என்பதை அறிந்திருக்கிறார்கள்.

07. தமது உள்ளங்களில் நன்றியுணர்வை நிரப்பி வைத்திருக்கறார்கள்: தம்மைப் படைத்தவனுக்கும் சக மனிதர்களுக்கும் தமது நன்றியை வெளிப்படுத்துவதில் புதிய வழிகளைக் கற்று கொண்டிருக்கிறார்கள்.

08. புதிய சவால்களை, வெவ்வேறு பண்பாடுகளை, பழக்கமில்லாத வழக்கங்களை, எதிர்மறையான கருத்துக்களை வரவேற்கிறார்கள், மதிக்கிறார்கள், மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்கிறார்கள்.

09.அறிவுத்தாகம், உண்மையின் தேடல், ஞானத்தை அடைதல் இவற்றை எப்போதும் தேடிக்கொண்டிருக்கிறார்கள்.

10. தமது எல்லைகள் என்ன என்பதை அறிவார்கள், ஆயினும் சாத்தியக்கூறுகளில் கவனம் செலுத்துகிறார்கள். தமது தனிச்சிறப்பை அறிந்திருந்தாலும் மனித குலத்துடன் ஒன்றிவாழ்வதை மதிக்கிறார்கள்.

இவை எம்மை பரிசோதிப்பதற்கான அளவு கோல். முதலில் மாற்றத்தை நம்மில் காண்போம். மானிடம் சீர்பட இலட்சிய வடம் இழுப்போம், அனைவரின் மனதிலும் இடம் பிடிப்போம், புதிய பாதையில் தடம் பதிப்போம். உடலைப் பலப்படுத்தி, மனதை செப்பமிட்டு குழந்தை மனதுடனும் நிறைந்த பண்புடனும் சிகரம் நோக்கி சிங்க நடை போடுவோம். உலகினில் எல்லோரும் உறவென்று சொல்வோம்; அன்பென்னும் இராஜாங்கம் அமைந்திடச் செய்வோம்.
போன காலங்கள் போகட்டும்: இனி புதிய வரலாறு படைப்போம்...!

அண்ணன்மார் கதை; சின்னண்ணன், பெரியண்னன் கதை என்றெல்லாம் அழைக்கப்படும் பொன்னர் சங்கர் கதை தமிழகத்தின் மேற்கு பகுதிகளான கோவை  ஈரோடு நாமக்கல் கரூர் தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம்,ஆகிய பகுதிகளில் குறிப்பாக வெள்ளாளக் கவுண்டர்கள் பெரும்பான்மையாக வாழும் இப்பகுதிகளில் நாட்டார் கதையாகவும், நோம்பி காலங்களில் கிராமங்களில் போடும் தெருக்கூத்துக்களாகவும், நாடகங்களாகவும் இருக்கிறது.
இப்படி ஒரு வரலாற்று பாரம்பரியமான அண்ணன்மார் கதை பொன்னர் சங்கர்  கதையாக கருணாநிதியால் கூர்மைப்படுத்தப்பட்டது.  அதன் பிறகு, கருணாநிதியின் அண்ணன்மார் கதையை தியாகராஜன் இயக்கி பிரசாந்த் நடிக்க பலகோடிகளை செலவழித்து பிரமாண்டமாக உருவாக்கியிருக்கிறார்கள், படமும் வெளிவந்துவிட்டது.
சரி!  அப்படி என்ன அண்ணன்மார்களிடம் இருக்கிறது அவர்கள் என்ன தீரன் சின்னமலை,கட்டபொம்மன் போன்று வெள்ளையனுக்கு எதிரான போரில் வீரமரணம் எய்திய மாவீரர்களா? பொன்னர் சங்கர் வாழ்க்கை வரலாறு நம் மக்களுக்கு சொல்லுகின்ற பாடம்தான் என்ன? எதற்காக அண்ணன்மார் கதையை கருணாநிதி மீள் உருவாக்கம் செய்தார்?
தான் கோவையில் வாழ்ந்த காலத்தில் அண்ணன்மார் கதையை கேட்டு ரசித்து  பொன்னர் சங்கர் கதையை எழுதியதாகவும் மு.க சொல்லியிருக்கிறார். தந்தை பெரியாரின் பாசறையில் வளர்ந்ததாக சொல்லிக்கொள்ளும் மு.க வை அணணன்மார் கதை கவர்ந்திழுத்திருக்கிறதே , அப்படியானால் கதையில் பார்ப்பன, பார்ப்பனிய இந்துத்துவா எதிர்ப்பு எதாவது இருக்குமா என்று தேடி பார்த்தால் ம்ஹும்… ஒரு வெங்காயமும் இல்லை.
கொங்கு வெள்ளாளக்கவுண்டர்களின் தலைவர்களான பொன்னர் , சங்கர் இருவரும் அண்ணன் தம்பிகள், இவர்களின் தங்கை அருக்காணி இவர்கள் வாழ்க்கை தான் அண்ணன்மார் கதை    இவர்களுக்கும், கொங்கு நாட்டு வேட்டுவ கவுண்டர்களின் தலைவனான தலையூர்காளிக்கும் இடையிலான சண்டையும் அதன் முடிவில் அண்ணன்மார்கள் இறப்பதே இக் கதை.  இக்கதை நடந்த காலகட்டம் பதினைந்தாம் நூற்றாண்டு என்று கூறப்பட்டாலும் அதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை.  இப்படி ஒரு கதை நடந்ததா அல்லது எவனாவது கரடி விட்டுட்டு போயிட்டானா? என நாம் சந்தேப்படுவதற்கான வாய்ப்புகளே அதிகமுள்ளன.
பொன்னரும் சங்கரும் இறந்த பின்பு அவர்கள் கடவுளாக்கபட்டு ஊர் ஊருக்கு கோயில் கட்டபட்டுள்ளது . கோயில் கட்டி கும்பிடும் அளவிற்கு அவர்கள் என்ன செய்தார்கள் என்றால் வேளாளக்கவுண்டர் சாதிக்காக வேட்டுவகவுண்டர்களிடம் சண்டை போட்டதுதான்.
அதுவும் கொடூரமாக வேட்டுவர் மக்களை வீழ்த்தியிருக்கிறான் பொன்னர்.கீழேயுள்ள அண்ணன்மார் பாடல்களில் பொன்னர் வேடுவர்களுக்கு எதிரான போரில் வேட்டுவர்களின் ஆண் குழந்தைகளையயல்லாம் தலையை வெட்டி கொன்றதாக கூறுகிறது.
“கிழக்கு வளநாடு கீர்த்தி உள்ள மேனாடு
 பெரிய மலையாளம் பெம்ந்துறையும் நன்னாடு
 வேடுதளம் உள்ளதெல்லாம் பொன்னர் வெட்டிக் கருவறுத்து
 ஆணென்று பிறந்ததெல்லாம் பொன்னர் அறுத்துச் சிரமறிந்தார்”
இப்படி வெள்ளாளர்களுக்கும் வேடுவர்களுக்கும் இடையிலான போரில் அண்ணன்மார்கள் மட்டும் வீரசிங்கங்களாக்கப்பட்டது ஏன்? 
வேடுவர்கள் மீதான பகையும் அதை தொடர்ச்சியாக வளர்த்தெடுப்பதற்கும் அண்ணன்மார்கள் கதை பயன்படுத்தபடுகிறது. கொங்கு நாட்டின் மண்ணின் மைந்தர்களான வேடுவர்கள் இப்பகுதியில் வேட்டையாடி தொழில் செய்து வருகின்றனர் அப்போது அங்கு பிழைப்புக்காக வந்த வந்தேறிகளான கொங்கு வெள்ளார்களுக்கும்  வேடுவர்களுக்கும் போர் நடநதாக கொங்குவேளாளர்கள் வரலாற்றில் கூறப்படுகிறது. என்றோ ஒரு காலத்தில் எவனோ ஒரு வேட்டுவனுக்கும் வெள்ளாளனுக்கும் இடையே நடந்த சண்டையை இன்னும் ஞாபகம் வைத்துக்கொண்டு கோயில் நோம்பிகளில் நாடகம் போட்டு பகையயை வளர்த்த வேண்டிய அவசியம் என்ன? ஒட்டுமொத்த வேட்டுவர்களையும் திருடர்களாக காட்டுவதை அனுமதிக்கவேண்டுமா?
இந்த அணணன்மார் நாடகங்களையும் கோயில்களையும் எந்தவொரு வேட்டுவனும் ரசிப்பதில்லை, ஒரு சாதியையே திருடனாக அழைப்பதை யார் தான் ஏற்று கொள்வார்கள்.
இன்றைய காலகட்டங்களில் குறிப்பிட்ட இரு சாதியினரும் நண்பர்களாக இருந்தாலும் இது போன்ற கதைகள் சாதி பகையை மூட்டி விடுகின்றன. அது ஏற்படுத்தும் பின் விளைவுகள் இன்றும் தொடர்கின்றன. கொங்கு இளைஞர் பேரவையின் அமைப்பாளர் தனியரசு சில ஆண்டுகளுக்கு முன் வேட்டுவக் கவுண்டர்கள் அதிகமாக வாழும் நாமக்கல் மாவட்டம் பூசாரிப்பட்டியில்  அவர்களை வமபுக்கு இழுத்து  ஒரு கலவரத்தையே உண்டாக்கினான். அதன் பின்னணியில் பொன்னர் சங்கர் கதையிருப்பதை மறுக்க முடியாது. அன்று வேட்டுவனாகவும் வெள்ளாளனாகவும் இருப்பவன் இப்போதும் அதே சாதியாக இருப்பான் என்று கூறமுடியாது.
இந்ந கதை  மூதறிஞர்(!) கருணாநிதியை கவர்ந்திழுக்க காரணம் என்ன?
ஓட்டு.
ஆம்! ஓட்டு பொறுக்குவதற்காக வேட்டுவன்களை தாழ்த்தியும் வெள்ளாளன்களையும் உயர்த்தியும் இக்கதையை மெருகேற்றியுள்ளார் மு.க., அதற்கு காரணம் கொங்கு பகுதியில் வேட்டுவக்கவுண்டர்கள் சிறுபான்மை சமூகத்தினராகவும் பொருளாதாரரீதியில் பின் தங்கியும்உள்ளனர். ஆனால் வெள்ளாளக்கவுண்டர்கள் பெரும்பான்மையுடனும், பொருளதார பின்னணியுடனும் உள்ளனர்.
ஒரு வேளை, வேட்டுவர்கள் பெரும்பான்மையினராக இருந்திருந்தால் மு.க பொன்னர் சங்கர் எழுதியிருக்கமாட்டார். மாவீரன் தலையூர் காளி என்ற வீர புராணத்தை எழுதியிருப்பார்.
தலையூர் காளியும் பொன்னர் சங்கரும் வேட்டுவர் சாதியைசேர்ந்தவர்கள் என்ற கருத்தும் உள்ளது இப்படி சம்பந்தப்பட்டவர்கள் என்ன சாதி என்பதிலும் பல கருத்து நிலவுகிறது .
இன்றையக் காலக்கட்த்தில் இப்படி ஒரு கதை தேவையா . இந்த டுபாக்கூர் சாதி வெறி கதையை ரசித்து எழுதியதாக சொல்லும் கருணாநிதிக்கு சாதி ஒழிப்பு வீரரான பெரியாரின் பெயரை சொல்லும்  தகுதி கூட கிடையாது.
நடந்ததா என்ற ஐயத்துக்குறிய கதையை எழுதும் கருணாநிதி   வெள்ளையர்களுக்கெதிரான காலனியாதிக்க போரில் வீரமரணம் அடைந்த மாவீரன் பகத்சிங்கின் கதையை எழுதுவாரா?  ஒரு வேளை பகத்சிங்கின் சாதியினர் தமிழ்நாட்டில் வாக்கு வங்கிகளாக இருந்திருந்தால் எழுதியிருந்தாலும் எழுதியிருப்பார் .

அன்பு உறவினர்களுக்கு வணக்கம்

அன்பு உறவினர்களுக்கு வணக்கம்
நமது சமூக வரலாறு வேட்டுவக்கவுண்டர் org யில் வெளியாகி உள்ளது.அனைவரும் பார்க்கவும்.இந்த கட்டுரையை யாரும் காபி பேஸ்ட் செய்து மெயிலோ, பிளாக்கிலோ போட வேண்டாம். இது காபி ரைட்
மெட்டீரியல். அனைத்து உறவுகளுக்கும் இந்த கட்டுரையின் லிங் கொடுங்க நேரடியாக சைட்டுக்கு சென்று
பார்வையிடட்டும்.நமது சமூக வரலாற்றைப் படிக்க இங்கு கிளிக் செய்யவும்
அன்புடன்
ஆர.முத்துசாமி