வியாழன், 19 மே, 2011

சங்க இலக்கியங்களில் வேட்டுவர்                  "வீரத்தாலொரு வேடுவனாகி"
                                      -(தேவாரம். 485, 4)

கண்ணப்பநாயனார்:  "வேடரதி பதியுடுப்பூர் வேந்த னாகன்
      விளங்கியசேய் திண்ணனார் கன்னி வேட்டைக்
  காடதில்வாய் மஞ்சனமுங் குஞ்சிதரு மலருங்
      காய்ச்சினமென் றிடுதசையுங் காளத்தி யாருக்குத்
  தேடருமன் பினிலாறு தினத்தளவு மளிப்பச்
      சீறுசிவ கோசரியுந் தெளியவிழிப் புண்ணீ
  ரோடவொரு கண்ணப்பி யொருகண் ணப்ப
      வொழிகவெனு மருள்கொடரு குறநின் றாரே"
                          - கண்ணப்பநாயனார் புராணம்.
       ‘மவுலி வேதியர் முன் எழுந்தருளி, 
        வன் திறல் வேடுவன் என்று மற்றவனை நீ நினையேல்,
        நன்று அவன் தன் செயல் தன்னை நாம் உரைப்பக் கேள்’ (156)

"சிந்தக்கடும்பகல் வேட்டையிற் காதலித் தடித்த
                         உடம்பொடு சிலைகணை உடைத்தோல் செருப்புத்
                         தொடர்ந்த நாயொடு தோன்றினன் தோன்றலும்"   
“கண்ணப்பர் ஒப்பதோர் அன்பின்மை கண்டபின் என்னப்பன் என்னையும் ஆட்கொண்டருளி”
-திருவாசகத்தில் மாணிக்கவாசகரின் வாக்குமூலம்.



"வன்கண் கானவன் மென்சொல் மடமகள்
         புன்புல மயக்கத்து உழுத ஏஅனல்
         பைம்புறச் சிறுகிளி கடியும் நாட
         பெரிய கூறி நீப்பினும்
         பொய்வலைப் படூஉம் பெண்டுதவப் பலவே"
                                      -இயல், ஐங்குறு நூறு 



[edit] வேட்டுவர்களின் வில்லாற்றல்:வேட்டுவர்கள் வில்லாற்றலில் சிறந்து விளங்கினர். அதற்கு கண சமூகத்தலைவர்களில் ஒருவனான வல்வில் ஓரியின் வில்லாற்றலே சிறந்த சான்றாகும். ஓரி என்பவன் கொல்லி மலைத்தலைவன், அவன் தன் வில்லாற்றல் காரணமாகப் புலவர்களால் வல்வில் ஓரி என்று சிறப்பிக்கப்பட்டான். அவனது வில்லாற்றலை வன் பரணர் புறப்பாடல் ஒன்றில் வியந்து போற்றுகிறார்.
"வேழம் வீழ்த்த விழுத் தொடைப் பகழி
       பேழ்வாய் உழுவையைப் பெரும்பிறிதுறீஇப்
       புழற்றலைப் புகர்க்கலையுருட்டி யுரற்றலைக்
       கேழற்பன்றி வீழவயல
       தாழற்புற்றத் துடும்பிற் செற்றும்
       வல்வில் வேட்டம் வலம் படுத்திருந்தோன்
       புகழ் சால் சிறப்பின் அம்பு மிகத் திளைக்கும்
       கொலைவன்"
                                   - புறநானூறு: 152
( யானையைக் கொன்று வீழ்த்த சிறந்த தொடையையுடைய அம்பு, பெரியவாயை யுடைய புலியை இறந்து படச் செய்து, துளை பொருந்திய கொம்பையுடைய தலையினையுடைய புள்ளிமான் கலையை உருட்டி, உரல் போலும் தலையையுடைய கேழலாகிய பன்றியை வீழச்செய்து அதற்கு அயலதாகிய ஆழ்தலையுடைய புற்றின் கட் கிடக்கும் உடும்பின் கண் சென்று செறியும் வல்வில்லால் உண்டாகிய வேட்டத்தை வென்றிப் படுத்தியிருப்பவன்: புகழமைந்த சிறப்பினையுடைய அம்பைச் செலுத்தும் தொழிலில் மிகச்சென்று உறுதற்குக் காரணமாகிய கொலைவன் ) என்று ஓரியின் வில்லாற்றல் வியந்து போற்றப்படுகிறது.


[edit] வேட்டுவச்சிறாரின் விற்பயிற்சி:வேட்டுவச் சிறுவர் விளையாட்டுப் பருவத்திலேயே விற்பயிற்சியைத் தொடங்கிவிடுவர், வளார்களில் மரற்கயிற்றைப் பிணித்து வில்லாகச் செய்வர். உடை வேலமரத்தின் உள்ளே புழையுடைய வெள்ளிய முள்ளை ஊகம் புல்லின் நுண்ணிய கோலிற் செருகி அம்புகளாகச் செய்வர். அவ்வம்புகளை வில்லில் தொடுத்து எய்து விளையாடுவர். இது குறித்துப் புறநானூறு அழகாகப்பேசுகிறது.
‘உழுதூர் காளை யாழ்கோடன்ன
      கவை முட்கள்ளிப் பொரியரைப் பொருந்திப்
      புது வரகரிகாற் கருப்பை பார்க்கும்
      புன்றலைச் சிறாஅர் வில்லெடுத்தார்ப் பிற்
      செங்கட் குறுமுயல் கருங்கலனுடைய
      மன்றிற் பாயும் வன்புலம்” 
                              - புறநானூறு : 322
(வன்புலமாகிய முல்லை நிலத்தில் வாழும் வில்லேருழவரான வேட்டுவர்களின் சிறுவர்கள் வரகுக் கொல்லைகளில் வரகினது அரிகாலைப் பொருந்தியிருக்கும் காட்டெலிகளை வேட்டமாடுவர். எலியொன்றைக் கண்டதும் அவர்கள் ஆரவாரம் செய்வர். அவ்வோசையைக் கேட்டு, அருகேமேயும் முயல்கள் அண்மையில் உள்ள அவர்களது குடிசையின் முற்றத்தில் இருக்கும் மட்கலங்களின் இடையே துள்ளிப் பாய்ந்து செல்லும். அதனால் மட்கலங்கள் உருண்டு உடைந்து கெடும்.) என்று அக்காட்சியைப் புறநானூற்றில் ஆவூர்கிழார் அழகுறக் காட்டுகிறார்.





‘வெருக்கு விடையன்ன வெருணோக்குக் கயந்தலை
     புள்ளன்தின்ற புலவுநாறு கயவாய்
     வெள்வாய் வேட்டுவர் வீழ்துணை மகாஅர்
     சிறியிலை உடையின் சுரையுடைவான் முள்
     ஊக நுண் கோற் செறிந்த அம்பின்
     வலாஅர் வல்விற் குலாவரக் கோலிப்
     பருத்தி வேலிக் கருப்பை பார்க்கும்
     புன்புலந்தழீஇய அங்குடிச்சீறூர்” 
                            
                             - புறநானூறு: 324
(வேட்டுவர்கள் காட்டுப் பூனையின் ஆணைப் போல் வெருண்ட பார்வையும் பெரிய தலையும் உடையவர்கள். பறவைகளின் ஊனைத் தின்பதால் புலால் நாற்றம் கமழும் மெல்லிய வெளுத்த வாயையுடையவர்கள். அவர்களின் பிள்ளைகள் ஒருவரையொருவர் விரும்பிநட்புக் கொண்டு உறையும் பண்பினை உடையவர்கள். அச்சிறுவர்கள் சிறிய இலைகளையுடைய ஊகம் புல்லில் செருகிய அம்பை வளாரால் செய்யப்பட்ட வில்லில் வைத்து வளைத்துப் பருத்தியாகிய வேலியடியில் உறையும் காட்டெலிகளை வீழ்த்துவதற்குக் குறி பார்த்து எய்து விளையாடுவர். இத்தகைய புன்செய் சூழ்ந்துள்ள அழகிய குடிகள் வாழும் சீறூர்) என்று ஆலத்தூர் கிழார் அமைவுறக் கூறுகிறார்.
எயினர்களின் விற்பயிற்சியும் வில்லாற்றலும் உணவுக்காக விலங்குகளை வேட்டையாடுவதற்கே பயன்படுத்தப்பட்டன என்பதைச் சங்க இலக்கியங்கள் நமக்குக் காட்டுகின்றன. மண்ணாசை மற்றும் அதிகார போதை காரணமாகப் போர்த் தொழிலில் ஈடுபட்டு சக மனிதர்களைக் கொல்லும் நிலையினை மனித சமூகம் இன்னும் எய்தவில்லை என்பதனை இங்கு நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.


பன்றிகள் கிளறிக்கிளைத்த புழுதியில் கானவர் தினை விதைத்தமை:      ‘அருவியார்க்கும் கழைபயில் நனந்தலைக்
      கறிவளரடுக்கத்து மலர்ந்த காந்தட்
      கொழுங்கிழங்கு மிளிரக் கிண்டிக் கிளையோடு
      கடுங்கட் கேழல் உழுத பூழி
      நன்னாள் வருபத நோக்கிக் குறவர்
      உழா அது வித்திய பரூஉக் குரற் சிறுதினை
      முந்து விளை யாணர்” 
                              - புறநானூறு : 168



"கிழங்ககழ் கேழல் உழுத சிலம்பிற்
      றலை விளை கானவர் கொய்தனர்” - ஐங்குறுநூறு : ௨௭௦



"கேழல் உழுத கரிபுனக் கொல்லை" 
                             - ஐந்தினை எழுபது : 11



[edit] பன்னிரண்டு திருமுறைகள்-தேவாரம், திருவாசகம், திருமந்திரம் "வேடுவர் சிறப்பு""மூன்று கொலாம் கணை கையது வில் நாண்
மூன்று கொலாம் புர மெய் தன தாமே
- பாடியவர்: திருஞானசம்பந்தர் 
"வில்லை வட்டப்பட வாங்கி அவுணர்தம்
வல்லை வட்டம்மதில் மூன்றுடன் மாய்த்தவன் தில்லை வட்டந்திசை கைதொழுவார் வினை ஒல்லை வட்டங் கடந்தோடுதல் உண்மையே"
- பாடியவர்: திருநாவுக்கரசர் தலம் : தில்லை சிதம்பரம்

"கொடுகு வெஞ்சிலை வடுக வேடுவர்
விரவலாமை சொல்லித் திடுகு மொட்டெனக் குத்திக் கூறைகொண்டு ஆறலைக்குமிடம் முடுகு நாறிய வடுகர் வாழ்முருகன் பூண்டி மாநகர்வாய் இடுகு நுண்ணிடை மங்கை தன்னோடும் எத்துக்கிங் கிருந்தீர் எம்பிரானீரே வில்லைக் காட்டிவெருட்டி வேடுவர் விரவலாமை சொல்லிக் கல்லினால் எறிந்திட்டும் மோதியுங் கூறை கொள்ளுமிடம் முல்லைத்தாது மணங்கமழ் முருகன் பூண்டி மாநகர் வாய் எல்லைக் காப்பதொன் றில்லையாகில் நீர் எத்துக்கிங் கிருந்தீர் எம்பிரானீரே பசுக்களே கொன்று தின்று பாவிகள் பாவம் ஒன்றறியார் உசிர்க் கொலை பல நேர்ந் துநாள்தொறும் கூறை கொள்ளுமிடம் முசுக்கள் போற்பல வேடர் வாழ் முருகன் பூண்டி மாநகர் வாய் இசுக்கழியப் பயிக்கங் கொண்டு நீர் எத்துக்கிங் கிருந்தீர் எம்பிரானீரே"
- பாடியவர்: சுந்தரர் தலம்: திருமுருகன் பூண்டி
             (காணாமல் போன நபர்கள், பொருட்கள் கிடைக்க ஓத வேண்டிய பதிகம்)



"கானவர்
     கரிபுனம் மயக்கிய அகன்காட் கொல்லை
     ஐவனம் வித்தி மையுறக் கவினி
     ஈனல் செல்லா ஏனற்கிழுமெனக்
     கருவி வானம் தலை இ"
(வேட்டுவர் சுடப்பட்டுக் கரிந்த புனத்தை மயங்க உழுத அகன்ற இடத்தையுடைய கொல்லைகக்கண் ஐவன நெல்லோடு வித்தி இருட்சியுற அழகு பெற்றுக் கோடை மிகுதியில் ஈன்றலைப் பொருந்தாத தினைக்கு இழு மென்னும் ஓசையுடன் மின்னலும் இடியும் முதலாகிய தொகுதியுடைய மழைத்துளி சொரிந்தது )என்று புற நானூறு கூறுகிறது.
- புற நானூறு (159)





"தேனினர் கிழங்கினர் ஊனார் வட்டியர்" 
             
                               - மலைபடுகடாம்



"வயமான் அடித்தேர்வான் போல" 
                               - கலித்தொகை குறிஞ்சிக் கலி





வேட்டுவர்களின் கவண் எறியும் கை வண்ணம்:    இடி உமிழ்பு இரங்கிய விரைபெயல் நடுநாள்
   கொடி விடுபு இருளிய மின்னுச் செய் விளக்கத்து
   பிடியொடுமேயும் புன்செய்யானை
   அடியொதுங்கு இயக்கம் கேட்ட கானவன்
   நெடுவரை ஆசினிப் பணவை ஏறிக்
   கடு விசைக் கவணையில் கல் கை விடுதலின்
   இறுவரை வேங்கை ஓள் வீசிதறி
   ஆசினி மென்பழம் அளிந்தவை உதிரா
   தேன் செய்இறா அல் துளைபடப் போகி
   நறுவடி மாவின் பைந்துணர் உழக்கி
   குலையுடைவாழைக் கொழுமடல் கிழியா
   பலவின் பழத்துள் தங்கும்” 
                            - கலித் தொகைப் (குறிஞ்சிக்கலி 5 )





வேட்டுவர்களின் பறவை வேட்டை:  "மானதட் பெய்த உணங்குதினை வல்சி
  கானக் கோழியோடிதல் கவர்ந்ததுண்டென
  ஆரநெருப்பினாரல் நாறத்
  தடிவாந் திட்ட முழு வள்ளாரம்
  இரும்பே ரொக்கலொ டொருங்கினிதருந்தித்
  தங்கினை சென்மோ பாண" 
                           - புறநானூறு 320

"படலை முன்றிற் சிறு தினை யுணங்கல்
 புறவு மிதலு மறவு முண்கெனப்
 பெய்தற் கெல்லின்று பொழுதே" 
                          - புறநானூறு : 319




எயினரது ஊரும் அரணும்: "ஊர், அருமிளை இருக்கையதுவே”
- புறநானூறு :326
(ஊர், கடத்தற்கரிய காவற்காடு சூழ்ந்த இடத்தின்கண் உள்ளது)



"வாழ்முள்வேலிச் சூழ்மிளைப் படப்பை”
                        - பெரும்பாணாற்றுப்படை : 126
(ஊர், முள்ளையுடைத்தாகிய வாழ்முள் வேலியினையும் அதனைச் சூழ்ந்த காவற் காட்டினையுடைத்தாகிய பக்கத்தையும் உடையது)


"அருங்குழு மிளை" 
                        - மதுரைக் காஞ்சி 64  
(பகைவர் சேர்தற்கரிய திரட்சியையுடைய காவற்காடு) என்னும் தொடர்கள் குறிஞ்சி நிலத்து வேட்டுவரது ஊர்களைச் சார்ந்து அமைந்திருந்த காவற்காடுகள் பற்றியும் அவற்றின் தன்மை பயன் ஆகியன குறித்தும் கூறுகின்றன.
"மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற் காடும் உடையதரண்"
                         - (குறள்)

"பருந்துபட
  ஒன்னாத்தெவ்வர் நடுங்க வோச்சி
  வைநுதி மழுங்கிய புலவுவாயெ‡கம்
  வடிமணி பலகை யொடுநிரைஇ முடிநாண்
  சாபஞ்சார்த்திய கணைதுஞ்சு வியனகர்
  ஊகம் வேய்ந்த உயர்நிலை வரைப் பின்
  வரைத் தேன்புரையுங்கவைக்கடைப்புதையொடு
  கடுந்துடி தூங்கும் கணைக் காற்பந்தர்
  தொடர் நாயாத்த துன்னருங்கடிநகர்
  வாழ்முள்வேலி சூழ்மிளைப் படப்பை
  கொடுநுகந்தழீஇய புதவிற் செந்நிலை
  நெடுநுதி வயக்கழு நிரைத்த வாயிற்
  கொடுவில்லெயினர் குறும்பு"
                   - பெரும்பாணாற்றுப்படை(117-129)





"பூவற்படுவில் கூவற்றொடீஇய
  செங்கட் சின்னீர்"
                   - புறநானூறு 319
(செம்மண் நிலத்து மடுவில் உள்ள நீர் நிலையைத் தோண்டியதால் உண்டாகிய சிவந்த இடத்தில் சிறிதாக ஊறிய நீர்) என்றும்


"களிறு நீறாடிய விடுநில மருங்கில்
 வம்பப் பெரும் பெயல் வரைந்து சொரிந்திறந்தெனக்
 குழிக்கொள்சின்னீர் குராஅ லுண்டலிற்
 சேறு கிளைத்திட்ட கலுழ்கண்ணூறல்"
                   - புறம்: 325
(பன்றிகளால் புழுதியாக்கப்பட்ட விடுநிலத்தின் கண் புதிதாக வந்த பெருமழை அவ்விடத்தை வரைந்து பெய்து நீங்கிற்றாக பள்ளங்களில் தங்கிய சிறிதாக ஊறிய நீரைக் கன்றையுடைய பசுவானது அங்கே முளைத்திருந்த புல்லை மேய்ந்து உண்டொழிதலால் சேற்றைநீக்கித் தோண்ட ஊறிய கலங்கலாகிய நீர்) என்றும்,
"களிறு பொரக் கலங்கிய கழன்முள் வேலி
   அரிதுண்கூவலங் குடிச் சீறூர்"
                  - புறநானூறு: 306
(களிறு படிந்துழக்கக்கலங்கிச் சேறாகும் உண்ணும் நீர் அரிதாகிய நீர் நிலையும் முள்ளையுடைய கழற்கொடியாலாகிய வேலியும் சூழ்ந்த அழகிய குடிகளையுடைய சீறூர்) என்றும் புறநானூறு, முல்லை நிலத்து வல்லுவர்க்கூவல் பற்றிப்பேசுகிறது.



வேட்டுவ குலங்களின் (கூட்டங்கள்) பெயர் வகைகள்

வேட்டுவர் மலர் ஜூன் 2010 இதழிருந்து
கொங்கு வீர பெருங்குடியினரான வேட்டுவரிடையே (கவுண்டர்) பல குளங்கள் (கூட்டப் பிரிவுகள்) ஏற்பட்டன. இவை எதனை என்பதை நாம் அறுதியிட்டு உறுதியாகக் கூற இயலாது. இருபினும், ஆயிரம் குலப் பிரிவுகள் இருந்ததாக அறியப்படுகிறது . எனவே தான் வேர் வகையை எண்ணினாலும் வேட்டுவர் வகையை என்ன முடியாது எனும் முதுமொழியும் ஏற்படுள்ளது. நடுகற்கள், கல்வெட்டுகள், செப்பெடுகள், ஓலைசுவடிகள், பஞ்சவர்ண ராஜகாவியம், இலக்கியம், சோழர் பூர்வ பட்டயம் ஆகியவை மூலம் அறியப்படுகின்ற சுமார் 363 குலங்களின் பெயர்கள் மட்டும் காண்போம். வேட்டுவர்கள் குலபிரிவுகள் அடிப்படையிலும் பல பகுதியாக பிரிந்து வாழ்தனர். சிலர் தாம் எந்த ஊரிலிருந்துகுடி பெயர்ந்தனரோ அந்த மன்னனின் (ஊரின்) பெயரைத் தமது குலத்திற்கு (கூட்டம்) வைத்துக் கொண்டனர். பலர், கொடை வீரம், மாண்பு, விலங்குகள், பறவைகள், மரம், செடி, கோடி, சங்க கால தலைவர்கள், பெண்பாற் புலவர்கள் ஆகியவற்றியையும் தமது குலபிரிவுகளாக கொண்டனர். இதன் காரணமாகவே, இக் கூட்டப் பெயர்கள் ஏற்பட்டுள்ளது. கொங்கு வேட்டுவரிடையே குல பட்டியலை கீழே காண்போம். வரலாற்று செம்மல் பேராசிரியர் இராசசேகரத்தங்கமணி அவருடைய “கொங்கு சமுதாயம் வேட்டுவர்” என்னும் நூலின் மூலம் வேட்டுவர் சமுதாயக் குலங்களை அதன் பெருமைகளுடன் தொகுத்து கூறும் இந்த “வேட்டுவர் கலிபெண்பா” கலூர் பரணன் அவைகள் மூலம் அறியப்பட்டது.
Kulam அந்தி வேட்டுவர் அந்துவ வேட்டுவர் அரிச்சந்திர வேட்டுவர் அமுத வேட்டுவர் அகத்திய வேட்டுவர் அம்பிகாபதி வேட்டுவர் அண்டவாணி வேட்டுவர் அக்னி வேட்டுவர் அல்லாள வேட்டுவர்
அன்னல் மீள வேட்டுவர் 
அமர வேட்டுவர் அகோர வேட்டுவர் அங்கி வேட்டுவர்
அச்சுத வேட்டுவர் 
அதிமுக வேட்டுவர் அம்பா வேட்டுவர் அறி வேட்டுவர் அருணை வேட்டுவர்
அவுதன வேட்டுவர் 
அனாதி வேட்டுவர் அன்னை வேட்டுவர் அண்ட வேட்டுவர் ஆலிலை வேட்டுவர் ஆனைமலை வேட்டுவர் அமரவதி வேட்டுவர் ஆமை வேட்டுவர் ஆப்ப வேட்டுவர் ஆவணி வேட்டுவர் ஆறுமுக வேட்டுவர்
ஆவை வேட்டுவர் 
ஆனந்த வேட்டுவர் இந்திர வேட்டுவர் இலங்க வேட்டுவர் (இரும்புலி) வேட்டுவர் இரண வேட்டுவர் இராச கெம்பீர வேட்டுவர் இரும்புரை வேட்டுவர் ஈங்கூர் வேட்டுவர் ஈஞ்சம்பள்ளி வேட்டுவர்
ஈசன் வேட்டுவர்  
உண்ணாடி வேட்டுவர் உதிர வேட்டுவர் உடும்பை வேட்டுவர்
உக்கிர வேட்டுவர் 
உத்தம வேட்டுவர்
உத்திர வேட்டுவர் 
உமைய வேட்டுவர்
உயர்குடி வேட்டுவர் 
உரிமைபடை வேட்டுவர் உரிமை வேட்டுவர்
உயர வேட்டுவர் 
உம்டி வேட்டுவர் உருமுக வேட்டுவர்
உளிய வேட்டுவர் 
உரும வேட்டுவர் ஊராளி வேட்டுவர் ஊதியூர் வேட்டுவர் எரிமுக வேட்டுவர் ஓரி வேட்டுவர் ஜெய வேட்டுவர் ஜெயவெந்த வேட்டுவர் கடம்ப வேட்டுவர்
கட்டாரி வேட்டுவர் 
கட்டி வேட்டுவர் கட்டை வேட்டுவர் கணபதி வேட்டுவர் கட்சி வேட்டுவர் கண்ண வேட்டுவர் கமலாலய வேட்டுவர் கரடி வேட்டுவர்
கரிப்படை வேட்டுவர்
கரிய வேட்டுவர் 
கருங்காலி வேட்டுவர் கருணை வேட்டுவர் கடும்பிளி வேட்டுவர்
கரும் பூளை வேட்டுவர்
கருங்கண்ண வேட்டுவர் 
கரைய வேட்டுவர் கவுதாரி வேட்டுவர் கள்ளை வேட்டுவர் கற்பூர வேட்டுவர் கற்ப வேட்டுவர் கடம்புலி வேட்டுவர் கரும்பாரி வேட்டுவர் கதிப்ப வேட்டுவர் கதிரிகளனை வேட்டுவர் கதிர் வேட்டுவர் கதுகாலி வேட்டுவர் கரட்டு வேட்டுவர் கரும்புனித வேட்டுவர் கருவண்ட வேட்டுவர் கவண்டி வேட்டுவர் களஞ்சி வேட்டுவர் களங்க வேட்டுவர் கடியநெடு வேட்டுவர் கன்னி வேட்டுவர் காமக்கண்ணி வேட்டுவர் காங்கய வேட்டுவர் காஞ்சி வேட்டுவர் காடை வேட்டுவர் காடு வேட்டுவர் காரை வேட்டுவர் காவலர் வேட்டுவர் காளத்தி வேட்டுவர் காந்தி வேட்டுவர் காரி வேட்டுவர் காச வேட்டுவர் காக்கா வேட்டுவர் கிழங்கு வேட்டுவர் கீதை வேட்டுவர் கீரந்தை வேட்டுவர் கீழ்சாத்தை வேட்டுவர் கீழ்முக வேட்டுவர் குடுமி வேட்டுவர் குரும்பில்லர் வேட்டுவர் குடதிசை வேட்டுவர் குன்னாடி வேட்டுவர் குபேர வேட்டுவர் குமரர் வேட்டுவர் குக்க வேட்டுவர் கும்பமுனி வேட்டுவர் குருகுல வேட்டுவர் குருமுனி வேட்டுவர் குயில் வேட்டுவர் குறும்ப வேட்டுவர் குன்ன வேட்டுவர் குறுண்டி வேட்டுவர் கூச்சந்தை வேட்டுவர் கூத்தாடி வேட்டுவர் கூரம்ப வேட்டுவர் கூகை வேட்டுவர் கொடுமுடி வேட்டுவர் கொடும்புளி வேட்டுவர் கொடும்பரி வேட்டுவர் கொச்சி வேட்டுவர் கொம்மடி வேட்டுவர் கொல்லி வேட்டுவர் கொன்னை வேட்டுவர் கொட்டபுளி வேட்டுவர் கொடும்ப வேட்டுவர் கொன்றை வேட்டுவர் கொங்கணாவேட்டுவர் கொடையூர் வேட்டுவர் கொடும்பூர் வேட்டுவர் கொழக்கதாளி வேட்டுவர் கொடை வேட்டுவர் கொள்ளுகழி வேட்டுவர் கோதண்ட வேட்டுவர் கோபாலர் வேட்டுவர் கோமாரி வேட்டுவர் கோமாளி வேட்டுவர் கோமுகி வேட்டுவர் சத்திய வேட்டுவர் சமய வேட்டுவர் சம்மந்த வேட்டுவர் சங்கு வேட்டுவர் சர்க்கரை வேட்டுவர் சரக்கு வேட்டுவர் சதிப்பு வேட்டுவர் சதுமுகை வேட்டுவர் சலங்கை வேட்டுவர் சாக்கை வேட்டுவர் சாம்பவி வேட்டுவர் சாலியன் வேட்டுவர் சாக்களி வேட்டுவர் சாந்தபடை வேட்டுவர் சாதி வேட்டுவர் சித்த வேட்டுவர் சித்திரை வேட்டுவர் சிலை வேட்டுவர் சிறுத்தலை வேட்டுவர் சிறுத்தை வேட்டுவர் சிவக்காடை வேட்டுவர் சிலம்பன் வேட்டுவர் சுண்ட வேட்டுவர் சுரண்டை வேட்டுவர் சுள்ளி வேட்டுவர் சுறன் வேட்டுவர் சுக்கிர வேட்டுவர் சுந்தர வேட்டுவர் சுப்ரமணிய வேட்டுவர் செம்பூளை வேட்டுவர் செம்ப வேட்டுவர் செங்கண் வேட்டுவர் சொட்டை வேட்டுவர் சொர்ண வேட்டுவர் சேர வேட்டுவர் சேதாரி வேட்டுவர் சோணாசல வேட்டுவர் சோள வேட்டுவர் சோலை வேட்டுவர் தழம்பு வேட்டுவர் தாவணர் வேட்டுவர் தகடூர் வேட்டுவர் தனஞ்செய வேட்டுவர் தன்மான வேட்டுவர் தலையூர் வேட்டுவர் தன்னம்பர் வேட்டுவர் தளபதி வேட்டுவர் திட்ட வேட்டுவர் திடுமால் வேட்டுவர் திங்கள் வேட்டுவர் திண்ணன் வேட்டுவர் தினை வேட்டுவர் துத்தி வேட்டுவர் துக்காச்சி வேட்டுவர் தும்பை வேட்டுவர் துர்க்கை வட்டுவர் தூண்டி வேட்டுவர் துரை வேட்டுவர் தூவை வேட்டுவர் தூங்க வேட்டுவர் தென்முக வேட்டுவர் தென்னிலை வேட்டுவர் தேரை வேட்டுவர் தேவேந்திர வேட்டுவர் தொய்யல் வேட்டுவர் தொரட்டி வேட்டுவர் தொக்க வேட்டுவர் தோராத வேட்டுவர் நச்சுழி வேட்டுவர் நம்ப வேட்டுவர் நறிய வேட்டுவர் நவ வேட்டுவர் நக்கல் வேட்டுவர் நஞ்சை வேட்டுவர் நங்க வேட்டுவர் நரம்பு வேட்டுவர் நட்சத்திர வேட்டுவர் நல்வாலை வேட்டுவர் நாதன் வேட்டுவர் நட்டுவ வேட்டுவர் நாரை வேட்டுவர் நான்முகு வேட்டுவர் நாரண வேட்டுவர் நுளம்ப வேட்டுவர் நூதர வேட்டுவர் நாளுபுவி வேட்டுவர் பகவதி வேட்டுவர் படைதலை வேட்டுவர் பட்டாளி வேட்டுவர் பண்ணை வேட்டுவர் பங்கய வேட்டுவர் பாரத வேட்டுவர் பத்திர வேட்டுவர் பரட்டை வேட்டுவர் பரம வேட்டுவர் பரிப்படை வேட்டுவர் பரிமள வேட்டுவர் பலகை வேட்டுவர் பள்ள வேட்டுவர் பறைய வேட்டுவர் பற்ப வேட்டுவர் பற்ப வேட்டுவர் பணய வேட்டுவர் பன்னாடை வேட்டுவர் பசப்பி வேட்டுவர் பண்ண வேட்டுவர் பானு வேட்டுவர் பாதரை வேட்டுவர் பாண்டிய வேட்டுவர் பறவை வேட்டுவர் பிரம்ம வேட்டுவர் பாத வேட்டுவர் பிரமியம் வேட்டுவர் புண்ணடி வேட்டுவர் புலிமுக வேட்டுவர் புளிய வேட்டுவர் புல்லை வேட்டுவர் (பிள்ளை ) புன்னாடி வேட்டுவர் புட்ப வேட்டுவர் புன்னந்தை வேட்டுவர் புன்னை வேட்டுவர் புவி வேட்டுவர் பூமாரி வேட்டுவர் பூலுவ வேட்டுவர் பூவாணி வேட்டுவர் பூச்சந்தை வேட்டுவர் பூழை வேட்டுவர் நொய்யல் வேட்டுவர் பெரியவகை வேட்டுவர் பெருமாள் வேட்டுவர் பெயர வேட்டுவர் பெருந்தலை வேட்டுவர் பெரீஞ்சை வேட்டுவர் பொண்ண வேட்டுவர் பொன்னை வேட்டுவர் வராக வேட்டுவர் வடுக வேட்டுவர் வன்னி வேட்டுவர் வஞ்சி வேட்டுவர் வடமலை வேட்டுவர் வள்ளி வேட்டுவர் வாகை வேட்டுவர் வாக வேட்டுவர் விக்கிரம வேட்டுவர் விதரி வேட்டுவர் வில்லி வேட்டுவர் வில்வ வேட்டுவர் விளக்கு வேட்டுவர் விளிய வேட்டுவர் வீரசங்காலி வேட்டுவர் வீரன் வேட்டுவர் வீராந்தை வேட்டுவர் வீரிய வேட்டுவர் வீணை வேட்டுவர் விசயமங்கல வேட்டுவர் விறகு வேட்டுவர் வினைய வேட்டுவர் விருபாச்சி வேட்டுவர் விந்தை வேட்டுவர் வெங்கச்சி வேட்டுவர் வெங்காஞ்சி வேட்டுவர் வெள்ளை வேட்டுவர் வெற்ப வேட்டுவர் வேந்த வேட்டுவர் வெலையன் வேட்டுவர் வேங்கை வேட்டுவர் வேதாரி வேட்டுவர் வேதகிரி வேட்டுவர் வேண்ட வேட்டுவர் வெம்ப வேட்டுவர் வேல் வேட்டுவர் ராயர் வேட்டுவர் பாத்திரம் வேட்டுவர் மானிய வேட்டுவர் மலாயா வேட்டுவர் மயில் வேட்டுவர் மகாமுனி வேட்டுவர் மன்னன் வேட்டுவர் மன்றி வேட்டுவர் மலையாண்டி வேட்டுவர் மாடந்தை வேட்டுவர் மாச்சடி வேட்டுவர் மாந்தபடை வேட்டுவர் மான வேட்டுவர் மாகாளி வேட்டுவர் மகாவீரன் வேட்டுவர் மாவளவன் வேட்டுவர் மாந்த வேட்டுவர் மின்ன வேட்டுவர் மினுக வேட்டுவர் மீள வேட்டுவர் மீன் வேட்டுவர் முரட்டு வேட்டுவர் முகிழ வேட்டுவர் மும்முடி வேட்டுவர் முழக்க வேட்டுவர் முளைப்பாரி வேட்டுவர் முன்னை வேட்டுவர் முதட்டை வேட்டுவர் முடகாளி வேட்டுவர் முடக்கடி வேட்டுவர் முறட்டை வேட்டுவர் மூத்த வேட்டுவர் மூளை வேட்டுவர் மூல வேட்டுவர் மொயர வேட்டுவ